தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன் என்பவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்துள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் அருகே உள்ள அம்மா உணவகத்தில் அவர் சாம்பார் சாதம் வாங்கியுள்ளார். பின்னர் அதை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார். இதனையயடுத்து வீட்டிற்கு சென்று அதை பார்த்தபோது, அதில் அரணை என்ற விஷ ஜந்து கிடந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வாந்தி எடுத்ததால் மீண்டும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். மேலும், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.