தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் குறித்து ஏதாவது சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால் தொடர்பு கொள்வதற்கான பிரத்தியேக தொலைபேசி எண்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் – 7845145001
  • சிவகங்கை கோட்டாட்சியர் – 7845738002
  • தேவகோட்டை கோட்டாட்சியர் – 7845014004
  • சிவகங்கை தாசில்தார் – 8438856008
  • மானாமதுரை தாசில்தார் – 8925786003
  • காளையார் கோவில் தாசில்தார்- 8438957006
  • திருப்புவனம் தாசில்தார் – 8925664001
  • இளையான்குடி தாசில்தார்- 9042317001
  • திருப்புத்தூர் தாசில்தார்- 8925078921
  • காரைக்குடி தாசில்தார்- 8807378005
  • தேவகோட்டை தாசில்தார்- 8870362101,
  • சிங்கம்புணரி தாசில்தார் – 8122576001