மத்தியபிரதேசம் மாநிலத்தில் சிஆர்பிஎப் வீரரான ரவிகாந்த் வர்மா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேணு என்ற மனைவியும் 2 வயதில் மகளும், 6 வயதில் மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபத்தில் ரவிகாந்த் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.

அதன் பிறகு கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது மனைவியை சுட்டு கொலை செய்து விட்டதாக தெரிவித்தார். அதன் பிறகு ரவிகாந்த் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். கணவன் மனைவி இருவரும் ஒரு அறையில் இறந்து கிடக்க, மற்றொரு அறையில் பிள்ளைகள் அழுது கொண்டிருந்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.