விஷமுள்ள உயிரிகளில் தேளுக்கு முக்கிய இடம் உள்ளது. ஆனால் தேளின் விஷம் கோடிகளில் விற்பனை செய்யப்படும் ஒரு விற்பனை பொருளாக உள்ளது. தேள் விஷத்தில் பல மருத்துவர் ரீதியான நன்மைகள் இருப்பதால் பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. ஈரான் மற்றும் துருக்கி போன்ற நாடுகள் தேள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பிட்ட தேளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தின் மூலம் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களுக்கு கூட மருந்து கண்டுபிடிக்கின்றனர்.

அதே சமயம் இதன் மூலம் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. ஒரு கிராம் தேளின் விஷம் இந்திய மதிப்பில் 85 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் சுமார் 84 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. துருக்கியில் உள்ள தேள் இனப்பெருக்க ஆய்வகத்தில் தினமும் சுமார் 2 கிராம் தேள் விஷம் எடுக்கப்படுகின்றது. தேள்களை பெட்டிகளில் இருந்து வெளியே எடுத்த பிறகு ஒரு துளி விஷத்தை அவை வெளியிடும் வரை ஆய்வக ஊழியர்கள் காத்திருப்பார்கள். அதன் பிறகு அது உறைய வைத்து பொடியாக்கி விற்பனை செய்யப்படுகின்றது.