அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் முறைகேடு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். 2021 தேர்தலின் போது விதிகளை மீறி பிரச்சாரம், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாகவும் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி ராஜ கண்ணப்பன் மனு தாக்கல் செய்திருந்தார்.