காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்காக ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல்களில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ள துவங்கினர். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனங்கள் தெரிவித்தது.

இந்நிலையில் கடலில் கப்பல்களை தாக்கும் ஹவுதிகளின் நிலைகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் ஆறாவது சுற்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனமான அல்மஸீரா அமெரிக்காவின் வான்வழி தாக்குதல் குறித்து தெரிவித்துள்ளது.