அமர்நாத் யாத்திரைக்குரிய மக்களின் காத்திருப்பானது தற்போது முடிவுக்கு வருகிறது. தெற்கு காஷ்மீர் இமயமலையிலுள்ள புனித குகை புனித தலத்துக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி நேற்று அமர்நாத் யாத்திரை 2023-க்கான ஆயத்தங்களை ஆய்வு மேற்கொண்டார் . அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிலவரத்தை அறிவதற்கு ஜூலை 1-ம் தேதி துவங்கும் அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகளை ராணுவத் தளபதிகள் 2 மாதங்களுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.