ESIC ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகம் (ESIC) ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது உறுப்பினர்களை சேர்த்து உள்ளது. சமீபத்திய புள்ளி விபரங்களிலிருந்து இத்தகவல் கிடைத்திருக்கிறது. 2023 ஏப்ரல் மாதத்தில் 17.88 லட்சம் புது ஊழியர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர் என ESIC-ன் ஆரம்ப ஊதியத்தரவு காட்டுகிறது என தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

இம்மாதத்தில் சுமார் 30,249 புது நிறுவனங்களானது ESIC-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ESIC கீழ் வரக்கூடிய ஊழியர்களுக்கு இலவச சிகிச்சையளிக்கப்படுகிறது. இதில் காப்பீடு செய்யப்பட்ட நபரைத் தவிர்த்து அவரை சார்ந்துள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் இலவச சிகிச்சையளிக்கப்படுகிறது. இதன் கீழ் சிகிச்சைக்குரிய செலவில் அதிகபட்ச வரம்பில்லை. எனினும் மருத்துவ காப்பீட்டில் இது நடக்காது. அதோடு ESIC வாயிலாக மகப்பேறு விடுப்புக்கான பலனும் கிடைக்கும்.