அப்பா என்றாலே கண் கலங்குபவர் சிவகார்த்திகேயன். அவர், தனது தந்தையின் 70வது பிறந்தநாளில், தந்தையை நினைவுகூர்ந்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். அதில், அதில், “அப்பா…. தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் உங்கள் முன்னே’. நான் இன்றைக்கு என்ன செய்தாலும் அதற்குக் காரணம் நீங்கள்தான், எல்லாம் கற்றுத் தந்ததுதான்.

நீங்கள் வாழ்ந்த விதத்தைப் பார்த்துத்தான், நம் கையில் இருப்பதை வைத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். உங்களுக்குப் பெருமை சேர்க்கும் மகனாக இருப்பேன். என்றென்றும் நீங்கள் நினைவு கூறப்படுவீர்கள் அப்பா” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.