தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகர் மயில்சாமி. தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மயில்சாமி சமீபத்தில் உயிரிழந்தார். இந்த நிலையில் தனது தந்தை உயிரோடு இருந்திருந்தால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்திருப்பார் என்று நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு தெரிவித்துள்ளார்.

மழை நிவாரண பணிகளை தொடங்கிய போது அவரை நினைவுகூர்ந்து கருத்துக்கள் பகிரப்பட்டன. அப்பாவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ததால் உடல்நிலை பாதிப்பும் என்று சொல்லியும் கேட்காமல் 2015 ஆம் ஆண்டு புயல் நேரத்தில் மக்களுக்கு உதவ சென்றதாக அன்பு தெரிவித்துள்ளார்.