
கன்னியாகுமரி மாவட்டம் சூரியகோடு பகுதியை சேர்ந்தவர் சம்பத் சந்திரா(38). இவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி சம்பத் வாறுதட்டு பகுதியில் இருக்கும் தனது தந்தை ரத்னசாமியின் கல்லறைக்கு சென்றுள்ளார்.
அங்கு வைத்து சம்பத் சந்திரா விஷம் குடித்து மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர் மேலும் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சம்பத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.