
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் சென்னை செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஏரியின் நீர்மட்டம் 23 அடியை கடந்ததால் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று நண்பகல் 12 மணி முதல் 6000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மழையில்லாத காரணத்தால் நீர்வரத்து 3000 அடியாக குறைக்கப்பட்டுள்ளது.