தமிழகத்தில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வு நடைபெற்ற நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.digilocker.gov.in, www.tnresults.nic in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தமாக 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகள் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் வழக்கமாக மாணவர்களை விட மாணவிகள் தான் இந்த வருடமும் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று மாணவிகள் 500-க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளனர். அதன்படி பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, அரியலூரைச் சேர்ந்த சோபியா, உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திவ்யா லட்சுமி ஆகியோர் 499 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். மேலும் இவர்கள் மூன்று பேரும் 4 பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.