கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் யஷ். இவர் கேஜிஎப், கேஜிஎஃப் 2 என்ற திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதில் கேஜிஎஃப் 2 திரைப்படம்‌ 1000 கோடி வசூலை கடந்து உலகம் முழுவதும் மெகா ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியால் கேஜிஎப் நாயகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கேஜிஎஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பாகுபலி ஹீரோ பிரபாஸ் உடன் இணைந்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சிலர் படத்தை தொடர்ந்து கேஜிஎஃப் 3 திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் சலார் படத்தில் கேஜிஎஃப் நாயகன் யஷ் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் நடிகர் யஷ் தற்போது உலகம் முழுவதும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பதால் சலார் படத்தில் அவர் நடித்தால் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்ற காரணத்தினால் பிரசாந்த் நீல் யஷ்ஷை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.