தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெண்களுக்கு மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் விடுபட்ட பெண்கள் மற்றும் திட்டத்தில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி புலம்பி கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும். அப்போது புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்ட மற்றும் தகுதியான பெண்களுக்கு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.