நடிகை ஐஸ்வர்யா ராய் இருவர் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அதிகமானார். அதன் பிறகு பாலிவுட்டில் கவனம் செலுத்தி வரும் இவர் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். தமிழில் ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு அபிஷேக் பிரச்சனை காதலித்து 2007 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதிகளுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்குள் சமீப காலமாக பிரச்சனை என்றும் இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் பேசிக் கொள்வதில்லை விவாகரத்து வரை இவர்களுடைய பிரச்சினை சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் மகளின் பள்ளி ஆண்டு விழாவிற்கு குடும்பமாக வந்து இருவரும் கலந்து கொண்டு விட்டு சென்றுள்ளனர். ஆனால் இவை உண்மை அல்ல என்று பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். அதாவது எல்லோர் வீட்டில் இருப்பது போன்று மாமியார், மருமகள் பிரச்சனை என்றும் அதனால் தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டதாகவும் செல்லும் முன்பாக அபிஷேக் பச்சனிடம் நான் முக்கியமா? இல்லை அம்மா முக்கியமா? என்ற கேள்வி முன்வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அபிஷேக் பச்சன் தனியாக வீடு பார்ப்பதற்கு யோசனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.