தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அ தன் பிறகு நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக்காகவே அவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாள் (87) என்கிற பாப்பா வயது மூப்பின் காரணமாக காலமானார். இவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து .

அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் சரோஜினி அம்மாளுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் வடிவேலுவின் அன்பு தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா மதுரை விரகனூரில் உடல்நல குறைவினால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். வைகைப்புயல் திரு. வடிவேலு அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.