தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி வருவதால் ஜனவரி 10ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் உட்பட சுமார் ஒரு கோடியே 15 லட்சம் மகள் இருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும். இவ்வளவு பேருக்கு ஒரே நேரத்தில் பணம் செலுத்த முடியாது என்பதால் நாளை ஜனவரி ஒன்பதாம் தேதி மதியத்திற்கு மேல் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தெரிகிறது.