வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய 600 விவசாயிகள் உயிரிழந்தனர். அந்த விவசாயிகளின் மனைவிகளின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா? மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்டார். அந்த பெண்ணின் தாலி குறித்து பிரதமர் யோசித்தாரா?

இன்று ஓட்டுக்காக, இழிவான கருத்துகளை மோடி பேசி வருகிறார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலியை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என பிரதமர் மோடி பேசியதற்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.