புலி வருகிறது என்பது போல திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக சில மாதங்களாக அண்ணாமலை கூறி வருகிறார். ஏப்ரல் 14ஆம் தேதி மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் ஊழல் பட்டியல் மற்றும் வாட்ச் பில் என அனைத்தும் வெளியிடப்படும், தனிப்பட்ட முறையில் யார் மீதும் தனக்கு கோபம் கிடையாது,அவரவர் அரசியலை அவரவர் செய்கிறார்கள் என கடந்த வாரம் அண்ணாமலை கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை சொன்ன ஏப்ரல் 14ஆம் தேதி என்பது நாளைய தினமாக உள்ள நிலையில் பட்டியலை வெளியிடுவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஃபேல் வாட்ச் பில் மற்றும் பத்து திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறி வருகிறார். அரசியல் ரீதியாக உற்று நோக்கப்பட்ட அண்ணாமலை எடுத்த உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.