மதுரை-தூத்துக்குடி இடையே இருக்கும் எலியார்பட்டி, புதூர் பாண்டியபுரம் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து நெடுஞ்சாலைதுறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், உச்சநீதிமன்றம் எலியார்பட்டி, புதூர் பாண்டியபுரம் சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.