கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனோ கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்த விஜயலட்சுமி தேவப்பா என்ற 22 வயது இளைஞருடன் தகாத உறவு வைத்திருந்தார். இருவரும் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். தேவபாவிற்கு விஜயலட்சுமி அத்தை முறையாகும். இது குறித்து அறிந்த விஜயலட்சுமியின் அண்ணன் இதனை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி தேவப்பாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். கடைசியாக ஒருமுறை ஒன்றாக இருக்கலாம் என்று தேவப்பா அழைத்ததை நம்பி சென்ற விஜயலட்சுமியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.