
ராஜஸ்தான் மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர் ஹரிபாவ் பக்டே. இவர் உதய்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜோதாவும் அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை மையப்படுத்தி ஒரு படம் கூட எடுக்கப்பட்டது. வரலாற்று புத்தகங்களும் இதைதான் சொல்கிறது.
ஜோதாவும் முகலாய பேரரசரான அக்பரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவித ஆதாரங்களும் இதுவரையில் கிடைக்கவில்லை. பர்மால் என்ற ஒரு மன்னன் இருந்த நிலையில் இவரது வேலைக்காரரின் மகளை தான் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார்.
ஆங்கிலேயர்கள் நம்முடைய வரலாற்றை மாற்றி எழுதி விட்டனர். அவர்கள் நம்முடைய மாவீரர்களின் வரலாறுகளை சரியாக எழுதவில்லை. அந்த வரலாற்றில் கூட ஆங்கிலேயர்கள் தான் ஆதிக்கம் செலுத்தினர். பெரும்பாலும் வரலாற்றில் கூட அக்பரை பற்றியே இருக்கும் நிலையில் மாகாராணா பிரதாப் பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.
புதிய தேசியக் கொள்கையின் மூலம் எதிர்கால சவால்களுக்கு புதிய தலைமுறை தயார்படுத்துவதோடு அவர்களுக்கு நம்முடைய கலாச்சாரத்தையும் கற்றுக் கொடுப்போம். மேலும் கடந்த 1575 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் அக்பர் மற்றும் பர்மலின் மகள் ஜோதா ஆகியோருக்கு நடந்த திருமணத்தை பற்றி தற்போது ராஜஸ்தான் மாநில ஆளுநர் மறுத்துள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது.