கோவாவின் பெல்லெம், நவெல்லிம் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில், வீட்டின் ஒருவரை போல அன்பாக வளர்த்து வந்த  நாய் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நாய் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததற்காகவே, அங்கு வசித்து வந்த ஒருவன் எயர்கன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு நாயை நேராக 4 முறை சுட்டுள்ளார். இதில் மூன்று குண்டுகள் நாயின் வயிற்றிலும், ஒன்று அதன் தலையிலும் பாய்ந்துள்ளன.

இந்த கொடூர சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில், பயந்து ஓடிக்கொண்டிருந்த நாயை குற்றவாளி அமைதியாகக் குறிவைத்து சுடும் காட்சி வெளியாகியுள்ளது. நாயின் உரிமையாளர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளித்ததோடு, கோவா விலங்கு பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகளும்  புகார் அளிக்க உதவினர். இதனைத் தொடர்ந்து  போலீசார் குற்றவாளி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Sudhir Kudalkar (@sudhirkudalkar)

“>

இந்த கொடூரத்தைக் கண்டித்து, கோவா முழுவதும் இருந்து வந்த விலங்கு ஆர்வலர்கள்,  காவல் நிலையத்துக்கு முன்பு ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

“இந்த நாயின் உடலில் இன்னும் குண்டுகள் இருக்கின்றன. அது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த குற்றவாளியை உடனடியாக கைது செய்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் மீதான மக்கள் எதிரொலி தொடர்ந்து அதிகரிக்கிறது. “விலங்குகளும் உயிர்கள்தான் – இந்த நிலைமைக்கு முடிவுக்கான வழி கடுமையான சட்ட நடவடிக்கையே,” என சமூக வலைதளங்களிலும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.