போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என தமிழக அமைச்சர் SS சிவசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் பேசிய அவர், ‘போக்குவரத்துத்துறை கழகம் ஒருபோதும் தனியார் மையம் ஆகவிடாமல் முதல்வர் ஸ்டாலின் காத்து வருகிறார். முன்னாள் CM கருணாநிதியின் வழியில் வந்த அரசு இது. போக்குவரத்து கழகங்கள் எந்த பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகின்றன.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மகளிர் இலவச பேருந்து பயணத்திற்காக 2023 ஆம் ஆண்டில் மட்டும் 2,800 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.