பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராடிய இந்திய நட்சத்திர மல்யுத்த வீரர்களான வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன், போராட்டத்தின் ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில் ஒருவரை குற்றம் சாட்டினால், உடனே கைது செய்ய முடியாது என மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டிற்கு BJP தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “மல்யுத்த வீராங்கனைகள் தங்களது குற்றச்சாட்டு தொடர்பாக ஆதாரங்கள் எதையும் சமர்ப்பிக்கவில்லை. குற்றம்சாட்டப்படும் ஒருவரை உடனே கைது செய்ய வேண்டும் என்பதுபோல் அவர்களின் கோரிக்கை உள்ளது. விசாரணை நடத்தியே நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார்.