கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவறை சந்திப்பிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில் சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வளைவான பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் இருந்த வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனால் வீட்டின் சுற்றுச்சுவர் முற்றிலும் சேதமானது.

இந்த விபத்தில் காயமடைந்த கார் டிரைவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த சமயம் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.