
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பத்மா நகரில் சீனிவாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கஸ்தூரி நவ்ருதி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 12 வயது ஆகிறது. இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று காலை சிறுமி பள்ளி செல்வதற்காக சிறுமி குளித்துவிட்டு ஆடை மாற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த சிறுமியை பெற்றோர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் கஸ்தூரி ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.