சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பாஜக பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், “அதிர்ச்சி எல்லாம் ஒன்றும் இல்லை. மகிழ்ச்சிதான்.

இந்த தேர்தலில் பாஜக களமாடி மிகப்பெரிய வெற்றியை பெறும் எங்களுக்கு எதிரி திமுகதான். அண்ணாமலை தலைமை பதவிக்கு வந்த பிறகு பாஜக எழுச்சி பெற்றுள்ளது. பல தொகுதிகளில் திமுகவை பாஜக தனியாக களமாடும் என தெரிவித்துள்ளார்.