
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஆயுதப்படை வளாகத்தில் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது உதவி ஆய்வாளர் பிரபாகர்(53) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையிலிருந்து உதவி ஆய்வாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்று உடல் தகுதி மற்றும் அலுவல் பணிகளை கையாள்வது குறித்த பயிற்சியை பிரபாகர் கடந்த எட்டு நாட்களாக எடுத்து வந்தார். தற்போது உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது