எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை ஒட்டி சென்னையில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜனவரி 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் ராதாகிருஷ்ணன்நகர் தொகுதியில் நாளை நடைபெறவிருந்த பொதுக்கூட்டம் ஜன.31க்கு தள்ளிவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பில் ஜன.31ம் தேதி நடக்கும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். அதிமுகவுக்கு இந்த பொதுக்கூட்டம் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது‌.