
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவர் சமீபத்தில் புஸ்ஸி ஆனந்துடன் பேசியதாக கருதப்படும் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது எடப்பாடி பழனிச்சாமியை நம்பி யாரும் கூட்டணிக்கு வருவது போல் தெரியவில்லை என அவர் ஒருமையில் பேசியுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது, புரளி பேசுவதற்கெல்லாம் கருத்து சொல்ல முடியுமா. இதே ஆதவ் அர்ஜூனா தான் அன்று என்னை அதிமுக கூட்டணிக்கு வருமாறு அழைத்தார். அவர் என்னை கூட்டணிக்கு அழைத்ததோடு துணை முதல் அமைச்சர் ஆக்குகிறேன் என்றும் கூறினார் என்றார். அதன் பிறகு படங்களுக்கான கேளிக்கை வரிவிதிப்பு குறைந்தது குறித்த கேள்விக்கு, இதனால் திரைத்துறைக்கு என்ன நன்மை நடக்கும். ஒரே ஒரு நிறுவனமும் குடும்பமும் தான் மொத்த படத்தையும் வாங்கி விநியோகம் செய்கிறது.
அவர்கள் நினைக்கும் படங்கள் தான் வெளியாகிறது. அப்படி இருக்கும்போது யாருக்காக இந்த கேளிக்கை வரியை குறைக்கிறார்கள். மின் கட்டணம் மற்றும் சொத்து வரியை எப்போது குறைப்பீர்கள். அதற்கு பதில் இருக்கிறதா என்று கேட்டார். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் சீமானை அவர் அதிமுக கூட்டணிக்கு அழைத்ததாகவும் துணை முதல்வர் பதவி தருகிறேன் என்று கூறியதாகவும் தற்போது அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.