அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம்பெற உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. தேசிய திறனாய்வு கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ள நிலையில் அதிமுக தன்னுடைய தலைமையின் கீழ் மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் எஸ்டிபிஐ ஏற்கனவே உள்ள நிலையில் தற்போது புரட்சி பாரதம் கட்சியின் கூட்டணியை தொடர முடிவு செய்துள்ளது.

விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று தொகுதிகளை புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று அந்த கட்சி தலைமை எதிர்பார்க்கின்றது. இதனைத் தொடர்ந்து வரும் வாரத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டு தொகுதி எது என்பது குறித்து அறிவிக்கப்படும் என பூவை ஜகன் மூர்த்தி கூறியுள்ளார்.