தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு ஆகஸ்ட் 15 நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணி அளவில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் ஜி எஸ் பிரபு நேற்று இரவு அவரின் அண்ணன் வீட்டின் அருகே உள்ள கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பிரபுவை சரமாரியாக வெட்டியதை சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.