இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் பலரும் தபால் துறை சேமிப்பு திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். ஏனென்றால் வங்கிகளை போல இல்லாமல் தபால்துறை சேமிப்பு திட்டங்களில் சிறந்த வட்டி கிடைக்கும். அது மட்டுமல்லாமல் இதில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. அதன்படி அஞ்சல் RD திட்டங்கள் மூலம் மக்களுக்கு பல பயன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதாவது இந்த திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்தால் உங்களுக்கு வட்டி கிடைக்கும். இதில் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து சேமிக்க முடியும். மத்திய அரசு தொடர் வாய்ப்புத்தொகை காண வட்டி விகிதத்தை 6.2 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் ஒவ்வொரு மாதமும் இந்த திட்டத்தில் 2000 ரூபாய் முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது 1,43,983 ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். மாதந்தோறும் 4 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் முதிர்ச்சியின் போது 2,83,968 ரூபாய் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.