ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விககெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது. இதில் கேப்டன் ரிஷப் பந்த் 88 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது.

இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் பந்துவீச்சாளர் மோகித் சர்மா மோசமான சாதனையை படைத்துள்ளார். இவர் நேற்று நடைபெற்ற போட்டியில் மொத்தமாக 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.