கேரளாவில் கொசுக்களில் இருந்து பரவும் ஜிகா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மக்கள் இடையே வேகமாக பரவி வருகிறது. இதனால் கடந்த சில தினங்களாக தலச்சேரி கோர்ட்டிலுள்ள வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் என சுமார் 100 பேருக்கு காய்ச்சல், உடல்வலி மற்றும் அலர்ஜி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கன்னூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் 7 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.