மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி தாலுகா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பனிப்பொழிவு இருந்தது இரண்டு நாட்களாக பணிபுரிவு குறைந்து இருந்தது. ஆனால் இன்று மீண்டும் தரங்கம்பாடி, தில்லையாடி, திருக்கடையூர், சங்கரன் பல்வேறு பகுதிகளில் அதிகாலை பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு பனிமூட்டம் இருந்தது. எனவே வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி வாகனத்தை இயக்கியுள்ளனர். அதிகாலை வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டனர்.