காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் மோடி சமூகம் குறித்து அவதூறு வழக்கில் 2 வருடங்கள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டனர். இந்நிலையில் ராகுல் காந்தி அதானிக்கு பின்னாள் இருக்கும் சக்தி யார் என்பது குறித்து பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். மின் திட்டம், சூரிய ஒளி, நிலக்கரி, மின்சாரம் மற்றும் துறைமுகம் போன்றவைகள் அதானி வசம் எப்படி சென்றது என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.