திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டணி மற்றும் அரசியல் சூழல்கள் குறித்த கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கட்சியின் தொண்டர்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியும் தங்கள் முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்கும் இறையாண்மை கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், கூட்டணி தர்மத்தையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் யாரையும் புண்படுத்தும் வகையில் கடுஞ்சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டுள்ள அவர், இதுவே ஒரு தலைவராகத் தன் தொண்டர்களுக்கு வைக்கும் முக்கிய வேண்டுகோள் எனத் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் அரசியல் மரபில் வந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்டியுள்ள அவர், நாகரிகமான அரசியல் பண்பைக் காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

“>

இந்நிலையில் கண்ணியமான முறையில் கருத்துகளைப் பதிவு செய்து, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவதே ஜனநாயகத்திற்கு அழகு என அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லதைப் பாராட்டவும், தவறுகளை ஆக்கப்பூர்வமாக விமர்சிக்கவும் கூடிய முதிர்ச்சியான அரசியல் பாதையில் தொண்டர்கள் பயணிக்க வேண்டும் என்பதே அவரது இந்த வேண்டுகோளின் சாராம்சமாகும்.