ஊடகங்கள் எப்போதும் தன்னை பற்றியே பேச வேண்டும் என்பதில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கவனமாக உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருமாவளவன் கூறியதாவது “அண்ணாமலை தன்னை முன் நிறுத்துவதில் குறியாக இருக்கிறார். தனிநபர் மீதான விமர்சனங்களை கடுமையாக முன்வைக்க வேண்டும் என்ற யுக்திகளை அவர் கையாண்டு வருகிறார்.

முன்பே அவர் ராணுவ வீரர்களிடம் சுட்டுத்தள்ளுங்கள் தமிழ்நாடு பாஜக பார்த்துக்கொள்ளும் என்று கட்டளையிட்டார். அப்பேச்சுக்கு காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். இப்போது அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்”  என்று கூறியுள்ளார்.