தமிழ்நாட்டின் பல்வேறு கோவில்களில் வைகாசி விசாகம் நேற்று முன்தினம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அன்னதானம் வழங்கினார். அப்போது அங்கு உள்ள முருகன் கோவிலில் பூஜை  நடைபெற்றது. அந்த பூஜையின் போது அங்குள்ள தொண்டர்கள் அனைவரும் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர்.

ஆனால் தொண்டர் ஒருவர் திடீரென செல்லூர் ராஜுவுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினார். உடனே கோபமடைந்த செல்லூர் ராஜு இப்படியெல்லாம் கோஷம் இடக்கூடாது என அவரை கடிந்து கொண்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.