
தமிழ்நாட்டின் தலைநகரான புது டெல்லியை சேர்ந்தவர் நேஹா(19) என்ற இளம் பெண். இவர் டெல்லியில் உள்ள ஜோதி நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். நேஹா மற்றும் அவரது தந்தை இருவரும் அதே பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
நேஹா அதே பகுதியை சேர்ந்த தவுபிக் என்ற இளைஞரை சிறு வயது முதலாகவே சகோதரன் என நினைத்து பழகி வந்துள்ளார். ஆனால் தவுபிக் நேஹாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்து சில மாதங்களுக்கு முன்பாக தவுபிக் நேஹாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு நேஹா மறுத்துள்ளதால் தவுபிக் தொடர்ந்து நேஹாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை நேஹா வீட்டின் மொட்டை மாடியில் துணி துவைப்பதற்காக நின்றிருந்தபோது அங்கு சென்ற தவுபிக் நேஹாவின் கழுத்தை பிடித்து நெரித்து மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டார்.
பின்பு நேஹாவின் அலறல் சத்தம் கேட்டு அவரது தந்தை சென்று பார்த்தபோது அங்கு தவுபிக் நின்று கொண்டிருந்தார். அவரிடம் நேஹாவின் தந்தை கேட்டபோது தவுபிக் அவரை கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். பின்பு மாடியில் இருந்து கீழே இறங்கும் போது தன்னை அடையாளம் தெரியாதவாறு பர்தா அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மாடியில் இருந்து கீழே விழுந்ததால் படுகாயமடைந்த நேஹாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் தவுபிக் ஐ கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.