இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் அனைவரின் கவலைகளை மறக்க வைக்கும்.

தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் குழந்தை ஒன்று தனது தாயின் கையில் இருந்த சாப்பாட்டை சாப்பிடுவதற்கு வாயை திறந்து உள்ளது. ஆனால் தாய் அந்த உணவை தனது வாயில் வைத்து சாப்பிடுகின்றார். இறுதியாக ஏமாந்த குழந்தை க்யூட்டாக கொடுத்த ரியாக்ஷன் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.