பிக் பாஸ்-7 டைட்டில் வின்னர் உண்மையில் மாயா தான் என்று பூர்ணிமா ரவி வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்து முடிந்தது. இந்த சீசன் சின்னத்திரை நடிகை அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் .இதனை தொடர்ந்து கடந்த சீசன் களை விட இந்த சீசனில்  போட்டியாளர்கள் மத்தியில் பெரிய சர்ச்சை எழுந்து வருகிறது .பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது சண்டையோடு நாளை கடத்திய இந்த பிரபலங்கள் வெளியில் வந்து தங்களின் வேலை காட்டி வருகிறார்கள்.

அதாவது மாயா பூர்ணிமா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் தனித்தனியாக சென்று அதன் பிறகு நெருங்கி தோழிகள் ஆனவர்கள் .வீட்டில் இருந்த வரை மற்ற போட்டியாளர்களை அடிமைப்படுத்துவது, அவதூறு பேசுவது இப்படியான வேலைகளை பார்த்து வந்தார்கள். அப்போது மாயா அங்கீகாரம் கிடைக்காமல் மூன்றாவது இடத்தை பிடித்து வெளியேறினார். இவர்களை எதிர்த்து அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வெளியே இருக்கும் பிரபலங்கள் உள்ளே இருக்கும் போது என்னென்ன விஷயங்கள் செய்வேன் என்று கூறினார்களோ அதை வெளியில் வந்து செய்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். விஷ்ணு அர்ச்சனாவின் வெற்றியை கொண்டாடிவரும் நிலையில் பூர்ணிமா மாயாவிற்கு பதிவு மாயா சார்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .அதில் நீங்கள் ஒரு போராளி. உண்மையான வெற்றியாளர். நான்  சொல்ல வேண்டியது எல்லாம் கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம் சொல்லிவிட்டேன். லவ் யூ என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த  பிக் பாஸ் ரசிகர்கள் வெளியில் வந்தும் நீங்கள் திருந்தவில்லையா? என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்