வணிக வளாகம் ஒன்றில் நடந்த அதிநவீன செல்போன் திருட்டுச் சம்பவம் பாதுகாப்புக் கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்திருட்டில் ஈடுபட்ட இரு பெண்கள் மிகவும் திட்டமிட்டுச் செயல்பட்டனர். கூட்டாளிகளில் ஒருவர், கடையில் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பெண்மணியை நெருங்கி, அவருடைய பாக்கெட்டில் இருந்த செல்போனைத் திருடினார். ஆனால், திருடியவர் அதைத் தனது கூட்டாளியிடம் நேரடியாகக் கொடுக்காமல், அருகில் இருந்த காட்சிப்படுத்தும் அடுக்கில் (Display Rack) சாமர்த்தியமாக வைத்துவிட்டு அங்கேயே நின்றார்.
Shopping Mall Haul, Cameras capture women stealing cell phones. Security cameras at a mall caught the moment two women snatched a cell phone , proving their ability to commit the illegal. pic.twitter.com/Iy6onvMhgQ
— Ersin (@Ersin0X) November 26, 2025
பாதிக்கப்பட்ட பெண் உடனே தனது செல்போனைத் தேடினார், ஆனால் திருடிய பெண்ணிடம் அது இல்லாததால், அவர் சந்தேகம் கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டவர் களைத்து அங்கிருந்து நகர்ந்த சிறிது நேரத்தில், இரண்டாவது கூட்டாளி வந்து ராக்கில் வைக்கப்பட்டிருந்த செல்போனைத் தனக்குச் சொந்தமான பொருள் போல எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்தக் கூட்டுத் திருட்டு முறையானது, எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமளிக்காமல் திருட்டைச் செய்யப் பெண்கள் பயன்படுத்திய தந்திரமான யுக்தியை சிசிடிவி காட்சிகள் மூலம் தெளிவாக உறுதி செய்துள்ளது.
