உலகக்கோப்பை செஸ் தொடரில் 2ஆம் இடம் பிடித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயதே ஆன இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்துள்ள பரிசுத்தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் இறுதிப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்று முதல் பரிசை தட்டிச் சென்றார்.

சாம்பியன் பட்டத்தை வென்ற கார்ல்சனுக்கு முதல் பரிசாக 1.10 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.90 லட்சம்) வழங்கப்பட்டது. 2ஆம் இடம் பிடித்த இந்தியாவின் பிரக்ஞானந்தாவிற்கு 80,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.66 லட்சம்) வழங்கப்பட்டுள்ளது.