அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புகழ்பெற்ற கலைப் பொருட்கள் சேகரிப்பு மற்றும் ஏல நிறுவனமான “சாத்பைஸ்” நடத்திய ஏலத்தில் வேல்ஸ் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகி இருக்கிறது. இது அதிகமான விலைக்கு விற்பனையான ஆடை எனும் பெருமையை பெற்றுள்ளது.

இந்த ஆடையானது 80 ஆயிரத்தில் இருந்து 1.2 லட்சம் டாலர் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை விட 5 மடங்கு அதிக விலைக்கு விற்பனை ஆகியுள்ளது என சாத்பைஸ் ஏல நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆடையை இளவரசி சென்ற 1991 ஆம் வருடம் அரச குடும்ப வரைப்படத்திற்காக அணிந்தார். அதோடு 1997-ம் ஆண்டு நடைபெற்ற போட்டோஷீட்டில் இந்த உடையை அவர் அணிந்திருந்தார் என சொல்லப்படுகிறது.