
தமிழகத்தில் வளிமண்டல மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கோவை மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்திற்கு 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.