தமிழகத்தில் அடுத்த ஆண்டிலிருந்து ஆவின் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் உள்ளிட்ட பதவிகள் ஒருங்கிணைத்த பொறியியல் சார்நிலை பணி தேர்வின் கீழும், மாநில போக்குவரத்துக் கழகத்தில் உதவி மேலாளர், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர், சட்டம் மற்றும் முதுநிலை அலுவலர் ஆகிய பணியிடங்கள் அனைத்தும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. மேலும் கூடிய விரைவில் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு காலி பணியிடம் மற்றும் தேர்வு நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.